search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாபிராம் வீடு கொள்ளை"

    பட்டாபிராம் அருகே ஆசிரியை வீட்டில் 51 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆவடி:

    ஆவடியை அடுத்த பட்டாபிராம் மார்டன் சிட்டி 4-வது தெவை சேர்ந்தவர் இம்மானுவேல். இவரது மனைவி சாந்தி.ஆசிரியையாக உள்ளார்.

    நேற்று சாந்தி தனது மகள் எஸ்தருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு இரவு வந்த போது முன்பக்க கிரீல் கேட் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பீரோவில் இருந்த 51 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது.

    இது குறித்து பட்டாபிராம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பட்டாபிராம் உதவி கமி‌ஷனர் ரமேஷ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    வேப்பம்பட்டு எஸ்.பி. பெருமாள் கோவில் நகரை சேர்ந்தவர் பிரகாஷ். வில்லிவாக்கத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர் குடும்பத்துடன் உத்திரமேரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பினார். அப்போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

    ×